உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்
சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு
துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே
சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே – அவர்
ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே
நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்
உன்றன் சுயமதியே நெறி -Untran Suyamathi Neri
- Grace Unleashed – Exploring the Theological Foundations of ‘Saved by Grace’
- Exploring the Intersection of Mercy and Salvation in Daily Life
- The Science Behind GRACE – Why Kindness Matters
- Stretched Faith – Finding Strength in Life’s Toughest Trials
- Beyond The Jury – Cultivating Trust in Legal Communities