Skip to content

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் – Sankarippaen

சங்கரிப்பேன் சங்கரிப்பேன்
சாத்தானின் கிரியைகளை
கர்த்தர் நாமத்தினால்
கல்வாரி இரத்தத்தினால்

ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்
திருவசனம் அறிக்கை செய்வேன்

1.வேதனையில் கூப்பிட்டேன்
பதில் தந்து விடுவித்தார்
என் பக்கம் இருக்கின்றார்
எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன்

2.சுற்றி வரும் சோதனைகள்
முற்றிலும் எரிகின்றன
எரியும் முட்செடி போல்
சாம்பலாய்ப் போகின்றன

3 .கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமம் செய்கின்றது
மிகவும் உயர்ந்துள்ளது
மிராக்கிள் (Miracle ) நடக்கின்றது

4. சாகாமல் பிழைத்திருப்பேன்
சரித்திரம் படைத்திடுவேன்
கர்த்தர் செய்தவற்றை
காலமெல்லாம் அறிவிப்பேன்

5. நல்லவர் கர்த்தர் என்று
எல்லோரும் துதித்திடுவோம்
என்றென்றும் அவர் கிருபை
நம்மேலே இருக்கிறது

6. கர்த்தர் என் பெலனானார்
நான் பாடும் பாடலானார்
நல்லோரின் குடும்பங்களில்
நாளெல்லாம் கொண்டாட்டமே