பல்லவி
சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா!
அனுபல்லவி
கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்
கடையற
1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்
நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர
2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,
சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர
3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்
உந்தனாளுகை நீங்கா தெந்தனை யாண்டிடும் அன்பாய் – சர
4. பாவஞ் சிதைந் தொழிய எங்கும் சாப மகன்றழிய
தேவ கோபம் தீர்த்திட துன்னிய கொள்ளை நோய் நைந்திட – சர
5. தீய சாத்தான் சோதனையில் சிக்கி சீர்கெடாமல்
தூய ஆவியால் புதிய ஜீவியஞ் செய்யவே துணைபுரி – சர
6. இந்த வருடம் செழிக்க எவரும் உனில் களிக்க
தந்தோம் அடியோர் துதிமிக தயவுடனாசீர்வதித்திடும் – சர