
Thuthi Sei Nitham song lyrics – துதிசெய் நிதம் துதிசெய்
Deal Score0

Thuthi Sei Nitham song lyrics – துதிசெய் நிதம் துதிசெய்
துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்
மனமே மனமே கலங்காதே
பரமன் வருவார் அருளை தருவார்
இனி ஏன் கவலை மனமே
1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்
மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)
என்னுடன் அவரும் அவருடன் நானும்
என்றுமே நிலைத்திருப்போம் – 2
2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்க
இதயம் மகிழுது பார்
இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டு
இனிதுற மலர்ந்திருப்போம் – 2