Skip to content

Ummodu selavidum Ovvoru Nimidamum – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்

உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா – என்னை
பெலவானாய் மாற்றுதையா

ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்
ஆகாயம் கொண்டு செல்லுதே

வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே
என்று பணிகிறார்களே பூமியிலே
மண்ணான நான் – உம் நாமம்
வாழ்கவென்று தொழுகிறேனையா

தாயனவள் தன் பாலனை மறந்தாலும்
என்னை மறவாதவர்
தகப்பனைப் போல் இரக்கமுள்ள
பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா

என் இயேசுவே உம் ஆவியால்
ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா
உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள
நாள் வரையில் உழைக்கணுமையா