Yedheynil Aadhi Manam Lyrics – ஏதெனில் ஆதி மணம்

Deal Score0
Deal Score0
Yedheynil Aadhi Manam Lyrics – ஏதெனில் ஆதி மணம்

Yedheynil Aadhi Manam Lyrics – ஏதெனில் ஆதி மணம்

1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே.

2. இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்.

3. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை
கொடுக்க வாருமே.

4. இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே.

5. மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே.

6. நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து, அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்.

7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo