தத்தமாய்த் தந்தேன் என்னையே

Deal Score0
Deal Score0
தத்தமாய்த் தந்தேன் என்னையே

பல்லவி
தத்தமாய்த் தந்தேன் என்னையே
நித்தமும் உந்தனின் சேவைக்கே
சரணங்கள்
1. துட்டனாய் அலைந்த பாவி நானே
கட்டளை யாவையும் மீறினேனே
பட்டமா பாடுகள் போதுமென்றே
கிட்டி உம் பாதமே வந்து நின்றே – தத்தமாய்
2. எந்தனின் உள்ளத்தில் ஆட்சி செய்வீர்
சிந்தின ரத்தத்தால் சுத்தம் செய்வீர்
எந்த இடத்திலும் எந்நேரமும்
உந்தனின் சாட்சியாய் நின்றிடவே – தத்தமாய்
3. நீர் தந்த வேலையை நித்தமும் நான்
நேர்மையாகச் செய்திட சக்தி ஈவீர்
ஏழ்மையில் ஏங்கிடும் மாந்தருக்கு
தாழ்மையாய்த் தொண்டு நான் செய்திடவே – தத்தமாய்

songsfire
      SongsFire
      Logo