Skip to content

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே

கண்ணீரை துடைக்கும் தேவனே என் இயேசைய்யா
கரங்களில் தாங்கும் தேவனே
உம்மை போல் அன்பு தெய்வம் உலகினிலே யாரும் இல்லை
எங்களை காக்கும் தேவனே என் இயேசைய்யா
எங்களை நடத்தும் தேவனே

அனாதையாக நானும் அலைந்தே திரிந்தேனே
அலைகடல் ஆழத்திலே அமிழ்தே போனேனே
அன்பு வைத்து தூக்கி எடுத்தீரே என் இயேசைய்யா -உம்
ஆதரவு எனக்கு தந்தீரே

ஊழிய பாதையிலே உடன் இருந்து காப்பவரே
உன்னத தேவனே உயிரோடு கலந்தவரே
கால்கள் சறுக்கும் போதெல்லாம் என் இயேசைய்யா – என்
கிருபையால் தாங்குகின்றீரே- உம்