Skip to content

Ratham Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

Ratham Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு
இரட்சகரின் இடம்
அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்கு
தன குற்றம் நீங்கிடும்
பல்லவி
நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்
2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்தான்;
அவன் போல் நம்பி இயேசுவால்
சுத்தனானேனே நான் – நான்
3. காயத்தில் ஓடும் இரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்;
விஸ்வாசமாய் மா நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான்
4. மரணம் என்னைப் பிரிக்கும்
நாள் பரியந்தமும்
இரட்சிக்கும் மா வல்லமையை
மேன்மையாய்ப் பாடுவேன் – நான்
5. தேவ வீரர் யாவருமே
பாவ மற்றொழுக
அருமை மீட்பா! உம் இரத்தம்
வல்லமை தந்திடும் – நான்