Skip to content

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாகவே நிச்சயமாகவே

முந்தினவைகளை நினைக்க
வேண்டாம் வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க
வேண்டாம் வேண்டாம்
புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
இப்பொழுதே தோன்றும் என்றாரே

கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு
காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
அனுதினம் நடத்திச் செல்வாரே

நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை