Ennai Uyirpiyum Song Lyrics

Ennai Uyirpiyum Song Lyrics

Ennai Uyirpiyum Song Lyrics

Ennai Uyirpiyum Song Lyrics in Tamil and English Sung By. Silbe Chingkame Gershon.

Ennai Uyirpiyum Christian Song Lyrics in Tamil

நான் உருக்குலைந்து போகிறேன்
உள்ளம் உடைந்து நொறுங்கி அழுகிறேன்
நெருக்கம் சூழ்ந்து அழுத்தவே நெஞ்சம் அமிழ்ந்து போகுதே
ஓயாத கண்ணீரிலே

என்னை தேற்றுமே உம் வார்த்தையின்படி
கண்ணீர் அகற்றுமே உம் கிருபையின்படி

கண்கள் இரண்டில் ஒலியும் இல்லை
தேடி செல்ல தடமும் இல்லையே
போகும் பாதை தெரியவில்லை
போவதெங்கே புரியவில்லையே
திகில் துறத்தும் இருளில் தனியே நான் தொலைந்து போகிறேன்
நெருப்பில் விழுந்த துளியாய் நான் மறைந்து போகிறேன்
உம் வழியை விட்டு தவறிய என்னை

வழி நடத்துமே உம் வார்த்தையின்படி
உறவாக்குமே உம் கிருபையின்படி

என் விழிகள் மறந்த உறக்கம்
உம் மடியில் கிடந்தால் பிறக்கும்
என் நெஞ்சில் நீளும் இரவுமே
உம் வார்த்தை கேட்டால் விடியுமே
மண்ணோடு ஒட்டிக்கொண்ட

என்னை உயிப்பியும் உம் வார்த்தையின்படி
உருவாக்குமே உம் கிருபையின்படி.


#songsfire

Trip.com WW

Scroll to Top