Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

பல்லவி
கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனே
தினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம்
சரணங்கள்
1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அற
கனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம்
2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்
இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம்
3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொரு
தீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம்
4. ஆகடியமாக முக் காட திட்டிராவெல்லாம்
ஏகனைப் பரிகாசமாய் ஈனர் குட்டவும் செய்தார்.- கனம்
5. கைச்சரசம் பண்ணினார்; காவல் மீதிருத்தினார்
அச்சமற்ற கந்தையாய் அநேக தூஷணன் சொன்னார். – கனம்
6. சங்க மீதிரண்டு பொய்ச்சாட்சிகள் எழுந்து
பங்கமான தோதினும், பரிந்து கேட்டிருந்தனர்.
7. பெத்தரிக்கமாகவே பேதுரு அப்போஸ்தலன்
சத்தியங்கள் பண்ணியே தான் மறுதலித்தனன்
8. கஸ்தியதுறச் சொல்லி, கனன் றெழுந்து ஆரியன்
வஸ்திரம் கிழித்துமே, மரணத் தீர்ப்பியற்றினன்

Scroll to Top