Kurusinil Thongiyae kuruthiyum – குருசினில் தொங்கியே குருதியும்

Kurusinil Thongiyae kuruthiyum – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு

  1. சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே

    சிலுவையில் சேர்த்தையோ! – தீயர்

    திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,

    சேனைத்திரள் சூழ — குருசினில்
  2. பாதகர் நடுவில் பாவியினேசன்

    பாதகன் போல் தொங்க – யூத

    பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்

    படுத்திய கொடுமைதனை — குருசினில்
  3. சூரிய சந்திர சகல வான் சேனைகள்

    சகியாமல், நாணுதையோ! – தேவ

    சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்

    துடிக்கா நெஞ்சுமுண்டோ? — குருசினில்
  4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த

    இறைவன் விலாவதிலே – அவர்

    தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்

    திறந்தூறோடுது பார் — குருசினில்
  5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது

    ஏங்கிப் புலம்பலையோ? – நின்

    எருசலையதிபன் இள மணவாளன்

Scroll to Top