MAARIDA EN NESARAE song lyrics – மாறிடா என் நேசரே

MAARIDA EN NESARAE song lyrics – மாறிடா என் நேசரே

மாறிடா என் நேசரே உம்மை என்றும் பாடுவேன்
கண்மணி போல் என்னை காத்தீரே உம்மை என்றும் போற்றுவேன்
நீரே எந்தன் தஞ்சம் நீரே எந்தன் கோட்டை
நீரே எந்தன் கன்மலை ஆனீர்

நன்றியோடு உம்மை ஆராதிப்பேன்
உண்மையோடு உம்மை ஆராதிப்பேன்
முழு உள்ளத்தால் ஆராதிப்பேன்
உயிர் உள்ளவரை ஆராதிப்பேன்

பாவ சேற்றில் இருந்த என்னை உம் கரத்தால் தூக்கினீர்
ரட்சிப்பை பரிசாய் தந்து என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர்
என் வாழ்வின் இருளை நீக்கி உந்தன் வெளிச்சம் வீச செய்தீர்
உம் கிருபையினால் என்னை உயிர்ப்பித்தீர்

கால்கள் தவறும் போது என்னை விழாமல் காத்தீர்
கைகள் இடரும் போது என்னை கைவிடாமல் காத்தீர்
உம் கோபம் ஓர் நிமிடமே உம இரக்கம் மிகவும் பெரிதே
உம் அன்பு என்றும் மாறாததே

Scroll to Top