Skip to content

Marikkavaa Piranthean – மரிக்கவா பிறந்தேன்

Marikkavaa Piranthean – மரிக்கவா பிறந்தேன்

1. மரிக்கவா பிறந்தேன்?
தரியாதோ ஜீவன்?
இகலோகம் விட்டென் ஆவி
வேறு லோகம் போகுமோ?
2. இப்பாரை விட்டபின்
எப்படியாவேனோ
நித்திய இன்பமோ துக்கமோ
சத்யமாய் என் பங்காகும்!
3. முழங்கும் எக்காளம்
எழும்புவேன் கேட்டு
காண்பேன் எரியும் ஆகாயம்
என் ஆண்டவரையுமே!
4. ஜெயத்துடனேயோ,
பயத்துடனேயோ,
எவ்வாறெழும்புவேனோ நான்
இவ்வுடலுடனே?
5. பரிசுத்தரோடோ
பழிகாரரோடோ
எவருடனே சேர்ப்பாரோ?
எவர்தான் அறிவாரோ?
6. கூட்டிக்கொள்வார் அல்லால்
ஓட்டி விடுவாரே!
பரத்திற் கழைப்பார் அல்லால்
நரகம் என் பங்காமே!