Mathumalar Niraikodi Kaiyilanthum

Faith Score0
Faith Score0

மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் 

மாட்சிமை நிறைசூசை மாமுனியே 

துதிவளர் உமது நற்பதம் வந்தோம் 

துணை செய்து எமையாளும் தாதையரே 

வானுலகிழந்ததால் கர்வமுற்ற 

வன்மனக் கூளியின் வலையறுக்க 

தான் மனுவாய் உதித்த கடவுள் 

தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம் 

ஒளிநிறை கதிரோனை ஆடை எனும் 

உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த 

துளிநிகர் அருள்பொழி மாமரியாள் 

துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய் 

தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து 

துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து 

ஆதிரையோரைக் கண் பார்த்துனது 

ஆசியை அளித்தருள் மாதவனே

Mathumalar Niraikodi Kaiyilanthum Lyrics in English

mathumalar niraikoti kaiyilaenthum 

maatchimai niraisoosai maamuniyae 

thuthivalar umathu narpatham vanthom 

thunnai seythu emaiyaalum thaathaiyarae 

vaanulakilanthathaal karvamutta 

vanmanak kooliyin valaiyarukka 

thaan manuvaay uthiththa kadavul 

thaathaiyaam soosai un thanjam vanthom 

olinirai kathironai aatai enum 

uduvathaith thalaiyilum mutipunaintha 

thulinikar arulpoli maamariyaal 

thunnaivanaam soosai un thunnaipurivaay 

thoothar vaanorkku maelaay uyarnthu 

thulangum simmaasanan thanilirunthu 

aathiraiyoraik kann paarththunathu 

aasiyai aliththarul maathavanae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo