Skip to content

Thanthane thuthippome song lyrics – தந்தானை துதிப்போமே

Thanthane thuthippome song lyrics – தந்தானை துதிப்போமே

தந்தானை துதிப்போமே-
திருச் சபையாரே, கவி-பாடிப்பாடி

அனுபல்லவி

விந்தையாய்
நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர்
நன்மை மிகமிகத்ஷ -தந்

சரணங்கள்

  1. ஒய்யாரத்துச் சீயோனே- நீயும்

    மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,

    ஐயனேசுக்குனின் கையைக்

    கூப்பித் துதி

    செய்குவையே, மகிழ்கொள்ளு

    வையே, -நாமும் -தந்
  2. கண்ணாரக் களித்தாயே,-

    நன்மைக்

    காட்சியைக் கண்டு ருசித்துப்

    புசித்து

    எண்ணுக்கடங்காத

    எத்தனையோ நன்மை

    இன்னுமுன்மேற் சோனாமாரி

    போற் பெய்துமே – தந்
  3. சுத்தாங்கத்து நற்சபையே-

    உனை

    முற்றாய்க் கொள்ளவே

    அலைந்து திரிந்து

    சத்துக் குலைந்துனைச்

    சத்தியாக்கத் தம்மின்

    ரத்தத்தைச்சிந்தி எடுத்தே

    உயிர் வரம் – தந்
  4. தூரம் திரிந்த சீயோனே-

    உனைத்

    தூக்கியெடுத்துக்

    கரத்தினிலேந்தி,

    ஆரங்கள் பூட்டி அலங்கரித்து

    நினை

    அத்தன் மணவாட்டி

    யாக்கினது என்னே! – தந்
  5. சிங்காரக் கன்னிமாரே,- உம்

    அலங்காரக் கும்மி அடித்துப்

    படித்து,

    மங்காத உன் மணவாளன்

    யேசுதனை

    வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப்

    பணிந்திடும் – தந்