
Neer Seitha Nanmaigal – நீர் செய்த நன்மைகள்

Neer Seitha Nanmaigal – நீர் செய்த நன்மைகள்
நீர் செய்த நன்மைகள் ஒன்றா இரண்டா
ஆயிரமாயிருங்கள்
என் நினைவுக்கெல்லாம் மேலானாவைகள்
அதை எண்ணி எண்ணி சொல்லி சொல்லி துதிக்கும்போது-2
என் உள்ளமெல்லாம் பூரிக்கிறதே
என் உணர்வெல்லாம் துடிக்கிறதே
என் மனமெல்லாம் துதிக்கிறதே
நீர்தானே எபிநேசர் எனக்கென்றும் உதவிடும்
என்றென்றும் எந்தன் நேசர்-2
1.மனிதர்கள் எனக்கு முடிவை எழுதும்போது
புது அத்தியாயத்தை என்னில் நீர் தொடங்கினீரே
உம் உள்ளங்கையில் என்னை வரைந்து கொண்டவரே
என்னை வேரோடு பிடுங்க நினைத்தவர் மத்தியில் – 2
என்னை வேறூன்ற செய்தீரே
உம்மில் கனி கொடுக்க செய்தீரே
உம்மில் நிலைக்க செய்தீரே
நீர்தானே எபிநேசர் எனக்கென்றும் உதவிடும்
என்றென்றும் எந்தன் நேசர் – 2 – நீர் செய்த
2.அப்பா பிதாவே என்று அழைத்தப்போது
என்னை அரவணைக்கும் தகப்பனாய் இருந்தீரே
உம் கரங்களால் ஆதரித்து நடத்தினீரே
என் தேவைகளை அறிந்து நீர் உதவினீரே – 2
நன்மை கிருபை தொடர செய்தீரே
என் வாழ்நாளெல்லாம்கூட இருந்தீரே
எனக்காக யாவும் செய்தீரே
நீர்தானே எபிநேசர் எனக்கென்றும் உதவிடும்
என்றென்றும் எந்தன் நேசர் – 2 – நீர் செய்த
Neer Seitha Nanmaigal | நீர் செய்த நன்மைகள் | Pas. L Johnson | Tamil Christian Song